பஞ்சாபில் 14 குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய பயங்கரவாதி அமெரிக்காவில் கைது!

 பஞ்சாபில் கடந்த 5 மாதங்களாக நடந்த 14 வெடிகுண்டுத் தாக்குதலில் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த குற்றவாளி ஹேப்பி பாசியா அமெரிக்காவில் கைது செய்யப்ட்டுள்ளார்.

ஹேப்பி பாசியா என்ற ஹர்ப்ரீத் சிங், பஞ்சாபின் காவல் நிலையங்கள் மீது பல பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திவிட்டு, அதற்கு சமூக வலைத்தளத்தில் பொறுப்பேற்றதாக கூறப்படுகிறது.

நவம்பர் 2024 முதல் அமிர்தசரஸில் உள்ள காவல் நிலையங்களை குறிவைத்து தொடர் குண்டுவெடிப்பு வழக்குகளில் அவர் தேடப்பட்டு வந்தார். அவர் குறித்த தகவலுக்கு ரூ.5 லட்சமும் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ மற்றும் பப்பர் கல்சா இன்டர்நேஷனலுடன் இணைந்து ஹேப்பி பாசியா பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியதாக பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள ஹேப்பி சிங் ICE (குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு) காவலில் உள்ளார். 




Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form