பெண்ணிடம் ரூ.2 கோடி மோசடி செய்த நைஜீரிய வாலிபர் கைது

 திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு நைஜீரிய நாட்டை சேர்ந்த ஆஸ்டின் ஓக்பா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி திருச்சூர் பெண்ணிடம் நைஜீரிய வாலிபர் பேசியபடி இருந்திருக்கிறார். அப்போது அவர் பல பொய் தகவல்களை கூறி திருச்சூர் பெண்ணிடம் பணம் பறித்தபடி இருந்துள்ளார்.

கடந்த 2023-ம் ஆண்டு முதல் கடந்தமாதம் (மார்ச்) வரை ரூ.2கோடி வரை பணம் பெற்றுள்ளார். முதலில் நைஜீரிய வாலிபரின் ஏமாற்றுவேலை திருச்சூர் பெண்ணுக்கு தெரியாமல் இருந்துள்ளது. இந்நிலையில் தற்போது நைஜீரிய வாலிபரின் மோசடி செயலை அறிந்துகொண்ட அவர், அதுபற்றி திருச்சூர் நகர குற்றப்பரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய போலீசார், பெண்ணிடம் ரூ.2கோடி மோசடி செய்த ஆஸ்டின் ஓக்பாவை கைது செய்தனர்.

அவரை மும்பை போலீசாரின் உதவுயுடன் கேரள போலீசார் கைது செய்திருக்கின்றனர். போலீசாரால் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இந்த மோசடியின் பின்னணியில ஆன்லைன் மோசடி கும்பல் இருப்பது தெரியவந்துள்ளது. ஆகவே இந்த மோசடி தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்ததப்பட்டு வருகிறது. மோசடியில் தொடர்புடைய மற்றவர்களை திருச்சூர் குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். 




Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form