இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

 இலங்கைக்கு வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி (CBSL) விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இலங்கை வரலாற்றில் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட இரண்டாவது அதிகளவு பணம் 2025 மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பணப் பரிமாற்றத்தின் பெறுமதி 693.3 மில்லியன் அமெரிக்க டொலர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 அத்துடன் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை பெற்ற மொத்த வெளிநாட்டுப் பணம் அனுப்புதல்கள் 1,814.4 மில்லியனாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இது 2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் பெறப்பட்ட 1,536.1 மில்லியன் டொலர் மதிப்போடு ஒப்பிடும்போது 18.1% அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 டிசம்பரில் இலங்கை பெற்ற 812.7 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தைத் தவிர்த்து, வரலாற்றில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பிய அதிகபட்ச பணப்பரிமாற்றம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form