தங்கம் முதல் அனைத்து பொருட்களின் விலையும் உயர்வு: பிரதமர் மோடியை கடுமையாக சாடிய சித்தராமையா

 தங்கம் முதல் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது என பிரதமர் மோடியை, கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது:-

பாஜக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை தலா 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. சமையல் எரிவாயு விலையும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள விலைவாசி உயர்வுக்கு நரேந்திர மோடி பொறுப்பேற்க வேண்டும். நல்ல நாட்கள் வரும்? என பிரதமர் மோடி சொல்வில்லையா?.

2014ஆம் ஆண்டுக்கு முன் 10 கிராம் தங்கம் விலை 28 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போது 95 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

அதேபோல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது வெள்ளி விலை ஒரு கிலோ 43 ஆயிரமாக இருந்தது. தற்போது 94 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகராக இந்தியாவின் பண மதிப்பு 2014-ல் 59 ரூபாயாக இருந்தது. தற்போது 87 ரூபாயாக உள்ளது. மிஸ்டர் நரேந்திர மோடி, நீங்கள் ஆட்சிக்கு வரும்போது டாலருக்கு இணையாக இந்தியாவின் பண மதிப்பை கொண்டு வருவோம் என வாக்கு அளித்தீர்கள். இதற்கு பொறுப்பேற்பது யார்?. இது ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சுவது இல்லையா? மிஸ்டர் மோடி.

50 கிலோ சிமெண்ட் மூட்டை 2014-க்கு முன்னதாக 268 ரூபாயாக இருந்தது. ஆனால் இன்று 410 ரூபாயாக உள்ளது.

இரும்பு ஒரு டன் 19 ஆயிரமாக இருந்தது. தற்போது 73 ஆயிரமாக உள்ளது. பிவிசி பைப்புகள் ஒரு யுனிட் 60 ரூபாய் என்ற வகையில் இருந்தது. இதை தற்போது 150 ரூபாயாக உயர்ந்து்ளது.

கர்நாடகாவில் பொதுமக்கள் கோபம் பேரணியை பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி நடத்த திட்டமிட்டுள்ளது. பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, விலைவாசி உயர்வால் மக்கள் மீது சுமையை திணித்தது. வெட்கமில்லாத பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான ஜேடி(எஸ்) கட்சிக்கு போராட்டம் நடத்த தார்மீக உரிமை இல்லை. அவர்களுக்கு சுயமரியாதை அல்லது வெட்கம் இருக்கிறதா?.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

 


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form