வெலகெதர பொலிஸ் பிரிவுக்குட்ட பகுதியில் 16 வயது பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 11 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அதையடுத்து அவர்களில் பதின்ம வயதுக்குட்பட்டவர்கள், சிறுவர் தடுப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும், இருவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.
ஏப்ரல் 16 ஆம் தினதி தனிப்பட்ட தகராறு காரணமாக சக பாடசாலை மாணவனை இளைஞர்கள் குழு ஒன்று உடல் ரீதியாக தாக்கியது.
பலத்த காயமடைந்த சிறுவன் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏப்ரல் 22 ஆம் திகதி உயிரிழந்தார்.
தாக்குதல் நடந்த நாளில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால், சிறுவர் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
மீதமுள்ள எட்டு சந்தேக நபர்களும் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, இரண்டு சந்தேக நபர்கள் ஏப்ரல் 29 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
மீதமுள்ள ஆறு சந்தேக நபர்கள் அனைவரும் பதின்மை வயதுக்குட்பட்டவர்கள் என்பதால், அவர்களையும் சிறுவர் தடுப்பு நிலையங்களுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
எட்டு சந்தேக நபர்களும் ஏப்ரல் 29 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாவத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.