4 நாட்கள் மட்டுமே போரில் தாக்குப்பிடிக்கும் ஆயுதங்கள்.. பாகிஸ்தான் ராணுவத்தின் உண்மை நிலை!

 பாகிஸ்தானில் பீரங்கி வெடிமருந்துகளுக்குக் கடுமையான பற்றாக்குறை இருப்பதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் விளைவாக, பாகிஸ்தான் நான்கு நாட்களுக்கு மேல் போரைத் தொடரும் நிலையில் இல்லை என்பது THERIYAVNATHULLATHU .

அவர்கள் தங்கள் ஆயுதங்கள் காட்சிக்காக அல்ல என்று வலியுறுத்துகிறார்கள். இருப்பினும், உண்மையான நிலைமை இதற்கு முற்றிலும் நேர்மாறாகத் தெரிகிறது.

பாகிஸ்தானில் கவச பிரிவு வாகனங்கள் மற்றும் பீரங்கி வாகனங்களுக்குத் தேவையான எறிகுண்டுகள் போதிய அளவில் இல்லை.

எம்.109 ஹவிட்ஜர்ஸ் ரக பீரங்கிகளுக்கு வேண்டிய எறிகுண்டுகளும், பி.எம்.-21 சாதனங்களுக்குத் தேவையான ராக்கெட்டுகளும் போதிய அளவில் இல்லாத சூழலில் நிலவுகிறது.

உக்ரைனுக்கு அதிகளவில் பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களை கொடுத்து விட்டதால், பாகிஸ்தானின் கையிருப்பில் குறைந்த அளவே ஆயுதங்கள் உள்ளன தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பீரங்கி வெடிமருந்துகளுக்கான சர்வதேச தேவை அதிகரித்து வருவதும், காலாவதியான தொழில்நுட்பங்கள் காரணமாக பாகிஸ்தானிய ஆயுத தொழிற்சாலைகள் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க இயலாமையும் அங்கு பீரங்கி வெடிமருந்துகளின் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது.

இந்தியாவுடன் நீண்டகாலப் போரை நடத்துவதற்கு பாகிஸ்தானிடம் நிதி மற்றும் இராணுவ வளங்கள் இல்லை என்று முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 




Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form