சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம், படுத்துக்கொண்டே 50 தொகுதிகளில் ஜெயிப்பேன் என்று பா.ம.க. நிறுவனர் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:
* முதலில் அவருடைய பிரச்சனைகளை தீர்த்துவிட்டு அதன்பிறகு வெற்றி தோல்வி பற்றி நிர்ணயிக்க வேண்டும். வெற்றி தோல்வி பற்றி கருத்து சொல்ல வேண்டும்.
* அவர்கள் குடும்பத்துக்குள்ளேயே குத்து, வெட்டு நடந்துகொண்டு இருக்கிறது. இவர்கள் எப்படி 50 தொகுதிகளை படுத்துக்கொண்டே ஜெயிக்க முடியும்.
* மக்களின் மீது நாட்டம் இல்லாதவர்கள், மக்களை பற்றி கவலைப்படாதவர்கள் தான் இப்படி சொல்வார்கள்.
* மக்களை நாடி செல்பவர் தான் உண்மையான மக்கள் பிரதிநிதியாக இருக்க முடியும். மக்களுடைய சேவகராக இருக்க முடியும். அந்த கருத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.