சென்னை தி.நகரில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இது எங்கள் கட்சி, நாங்கள் வெற்றி பெறுவதற்காக கூட்டணி வைத்திருக்கிறோம்.
அதிமுக- பாஜக கூட்டணி வலிமையானது மட்டுமல்ல வெற்றிக் கூட்டணி.
இன்னும் பல கட்சிகள் அதிமுக- பாஜக கூட்டணிக்கு வரப்போகின்றன.
அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறினார்.
வெற்றி கூட்டணி அமைத்திருக்கிறோம். திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்களுக்குள் இணையும்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது என முதலமைச்சர் நினைத்தார்.
திமுகவுக்கு அதிகாரம் தான் முக்கியம், கொள்கை முக்கியம் இல்லை.
எந்தக் காரணத்தையும் கொண்டு திமுக மீண்டும் ஆட்சி வரக் கூடாது என்பது மக்களின் எண்ணம்.
பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்கவில்லையா ? நீங்கள் மட்டும் யாருடனும் கூட்டணி வைப்பீர்கள்?
அதிமுகவை மிரட்டி பாஜக பணிய வைத்திருப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.
பச்சோந்தியை விட வேகமாக நிறத்தை மாற்றுவது போல் கூட்டணியை மாற்றும் திமுக
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.