எந்தப் பயனும் இல்லை.. அருணாச்சல பிரதேச பகுதிகளின் பெயர்களை மாற்றிய சீனா - மத்திய அரசு விளக்கம்

 அருணாச்சலப் பிரதேசத்தின் இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் உள்ள இடங்களின் பெயர்களை மாற்ற சீனா முயற்சிப்பதை இந்தியா கண்டித்துள்ளது.

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள இடங்களுக்குப் பெயரிட சீனா பயனற்ற மற்றும் அபத்தமான முயற்சிகளை மேற்கொண்டு வருவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்தியா அத்தகைய முயற்சிகளை முற்றிலுமாக நிராகரிக்கிறது" என்று ஜெய்ஸ்வால் கூறினார்.

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்ற மறுக்க முடியாத யதார்த்தத்தை இதுபோன்ற பெயரிடுதல் மாற்ற முடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.

இதுதொடர்பாக பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், "அருணாச்சலப் பிரதேசம் நேற்று, இன்று, நாளை என எப்போதும் இந்தியாவின் ஒரு மாநிலமாகும். பெயரை மாற்றுவதால் எந்த மாற்றமும் ஏற்படாது" என்று கூறினார்.


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form