சித்ரா பவுர்ணமியை ஒட்டி வரும் 11, 12ஆம் தேதிகளில் திருவண்ணாமலைக்கு, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்தில் இருந்து 11ஆம் தேதி 1,156 பேருந்துகளும், 12ஆம் தேதி 966 பேருந்துகளும், மாதாவரத்தில் இருந்து 2 நாட்களும் தலா 150 பேருந்துகளும் இயக்கப்படும்.
மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு 11ஆம் தேதி 1,940 பேருந்துகளும், 12ஆம் தேதி 1,530 பேருந்துகளும் இயக்கப்படும்
SETC மூலம் 40 ஏசி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து 2 நாட்களும் இயக்கப்பட உள்ளன. இதற்கு TNSTC இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.