மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்- மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

 தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த மே 25ம் தேதி நாகையைச் சேர்ந்த 23 மீனவர்கள் இலங்கையை சேர்ந்த அமையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு உள்ளனர்.

இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களை தடுக்க இலங்கை அதிகாரிகளிடம் பிரச்சனையை எடுத்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 101 மீனவர்கள், 12 படகுகளையும் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form