வாஷிங்டன்:
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ ஆகியவை இணைந்து 2025ல், 'ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4' என்ற திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது.
ஆக்ஸியம் மிஷன் 4 திட்டத்தின் பைலட்டாக இந்திய விமானப் படையில் அனுபவம் வாய்ந்த விமானியான சுபான்ஷு சுக்லா பணியாற்றுவார்.
இந்நிலையில், வரும் மே 29ம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் பெல்கான் ராக்கெட் மூலம் சுபான்ஷு சுக்லா விண்வெளி செல்கிறார். மே 29ம் தேதி இந்திய நேரப்படி இரவு 10:33 மணிக்கு ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் ஏவப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் லக்னோவை சேர்ந்தவரான குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா (39), 2006ம் ஆண்டு இந்திய விமானப்படையில் பணியில் சேர்ந்தார். இவருக்கு 2000 மணிநேரம் வானில் பறந்த அனுபவம் உள்ளவர். சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் இரண்டாவது இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா என்பது குறிப்பிடத்தக்கது.