சித்தராமையா தலைமையிலான கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்க முடிவு செய்தது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதனைத் தொடர்ந்து மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவை கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பு மதம் அடிப்படையில் இடஒதுக்கீட்டை அனுமதிக்கவில்லை என கவர்னர், மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.