முர்ஷிதாபாத் வன்முறை: 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

 கொல்கத்தா:

மேற்குவங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது. அதன் பின்னர் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை வெடித்தது. இதில் தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற கலவரத்தில் 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து சுதி, துலியன், சம்சர்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் பகுதிகளில் பதற்றம் நிலவியது.

இந்நிலையில், முர்ஷிதாபாத் வன்முறை தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க மேற்குவங்க போலீசார் 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளனர்.

சிறப்பு விசாரணைக்கு சிஐடி, எஸ்டிஎப், ஐபி-யைச் சேர்ந்த 9 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

குற்றங்களுடன் தொடர்புடைய அனைத்து எப்.ஐ.ஆர், விசாரணைகள் மற்றும் உளவுத்துறை மதிப்பீடுகளையும் இந்தக் குழு கையாளும்.

 


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form