ஆக்ரோசமான நிலைப்பாடு எடுக்க வேண்டாம்: பாக். பிரதமருக்கு நவாஸ் ஷெரீப் ஆலோசனை வழங்கியதாக தகவல்..!

 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம்சாட்டி தாக்குதலுக்கு தயாராகி வருகிறது.

பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் சஸ்பெண்ட் செய்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத்துறைக்கான பாராளுமன்றக் குழு கூட்டம் இன்று முக்கிய ஆலோசனை நடத்தியது, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங பிரதமர் மோடியை சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினார்.

இதனால் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. விரைவில் பாகிஸ்தானை தாக்கலாம் என்பதால் போர் பதற்றம் நிலவுகிறது.

இந்தியா எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பாகிஸ்தான் பதில் நடவடிக்கை எடுத்து வருகிறது. எல்லையில் படைகளை குவித்து வருகிறது. சிம்லா ஒப்பந்தத்தை சஸ்பெண்ட் செய்துள்ளது. வான்வெளியை பயன்படுத்த இந்தியாவுக்கு தடைவிதித்துள்ளது.

இந்த நிலையில் ஆளுங்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் நிறுவனரும், மூன்று முறை பாகிஸ்தான் பிரதமருமான நவாஸ் ஷெரீப் தனது சகோதரரும், பிரதமருமான ஷெபாஷ் ஷெரீஃபிடம் இந்தியாவுக்கு எதிராக ஆக்ரோசமான எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்தியா உடனான பதற்றத்தை கட்டுப்படத்த அனைத்து டிப்ளோமேட்டிக் வளங்களை பயன்படுத்தவும் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுத்த முடிவுகள் குறித்து நேற்று மாலை நவாஸ் ஷெரீப்பை சந்தித்து ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். அப்போது நவாஸ் ஷெரீப் இந்த ஆலோசனையை வழங்கியதாக கூறப்படுகிறது.

 


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form