மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும்: சுவேந்து அதிகாரி

 மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் நடத்தப்பட வேண்டும் என பாஜக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறை காரணமாக சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது எனுவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுவேந்து அதிகாரி கூறுகையில் "முர்ஷிதாபாத் மாவட்டத்தின் சுதி, துலியான் ஜாங்கிபூர், ஷாம்ஷெர்கஞ்ச் போன்ற பகுதியில் இன்னும் பதற்றமான நிலை நீடிப்பது, மக்களை காப்பாற்றுதல் மற்றும் அமைதியை நிலைநாட்டுதல் திறனை மாநில அரசு இழந்து விட்டது என்பதை காட்டுகிறது.

எங்கெல்லாம் இந்துக்கள் மைனாரிட்டியாக உள்ளனரோ, அங்கெல்லாம் அவர்கள் வாக்களிக்க மறுக்கப்படுகிறார்கள். காவல்துறையினர் ஆளுங்கட்சி தொண்டர்கள் போன்று செயல்படுகிறார்கள். சுதந்திரமான, வெளிப்படையான தேர்தலுக்கு, சட்டசபை தேர்தல் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் நடத்தப்பட வேண்டும்.

சமீபத்தில் நடைபெற்ற வன்முறைக்கு பின்னால், jihadist சக்திகள் உள்ளது. இந்தக் குழுக்கள் வெறித்தனமாகச் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. நாங்கள் அவர்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம், ஆனால் ஒரு சமமான போட்டி இருக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியைப் பரிந்துரைப்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்" என்றார்.

 


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form