அகமதாபாத்:
குஜராத்தில் கடந்த சில தினங்களாக இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
அடுத்த சில நாட்களுக்கு குஜராத்தில் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் பருவம் தவறிய மழை பெய்துள்ளது. கேடா, காந்தி நகர், மெஹ்சானா மற்றும் வதோதரா மாவட்டங்களில் 25 முதல் 40 மி.மீ. மழை பெய்துள்ளது.
மின்னல், மின்சாரம் பாய்தல், மரங்கள், வீடுகள் மற்றும் விளம்பர பலகைகள் இடிந்து விழுந்தது போன்ற மழை தொடர்பான சம்பவங்களில் 14 பேர் உயிரிழந்தனர்.
கேடா மாவட்டத்தில் 4 பேர், வதோதராவில் 3 பேர், அகமதாபாத், தாஹோத் மற்றும் ஆரவல்லியில் தலா 2 பேர் மற்றும் ஆனந்த் மாவட்டத்தில் ஒருவர் என மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர் என தெரிவித்தனர்.