இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் 2 நாள் போர் பயிற்சி நடத்தும் இந்திய விமானப்படை

  சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோடு (LOC) அருகே நடக்கின்றது.

இந்திய விமானப்படை, இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோடு (LOC) அருகே மே 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் விமானப் பயிற்சி நடத்த உள்ளது.

இந்த போர் பயிற்சி குறிப்பாக தென்மேற்கு விமானப்படை டிவிஷனில் வரும் ராஜஸ்தான் பகுதிகளில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நேரத்தில் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது.

இந்தப் பயிற்சியில் போர் விமானங்களின் அதிக இயக்கம் இருக்கும் என்று NOTAM அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் ரபேல், மிராஜ் 2000 மற்றும் சுகோய்-30 விமானங்கள் உட்பட அனைத்து முன்னணி விமானங்களும் பங்கேற்க உள்ளது.

இந்தப் பயிற்சி மே 7ம் தேதி இரவு 9:30 மணிக்குத் தொடங்கி மே 8ம் தேதி அதிகாலை 3:00 மணி வரை தொடரும். 




Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form