பாகிஸ்தானின் எப்-16 உள்ளிட்ட 3 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது இந்தியா

 புதுடெல்லி:

பஹல்காம் தாக்குலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன.

இதனால் நிலைகுலைந்து காணப்படும் பாகிஸ்தான், காஷ்மீரில் தற்கொலைப்படை டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் எஸ்-400 வான் பாதுகாப்பு கவசம் மற்றும் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இந்நிலையில், பாகிஸ்தான் விமானப் படைக்குச் சொந்தமான எப்-16 போர் விமானம் உள்ளிட்ட 3 போர் விமானங்களை இந்திய வான் பாதுகாப்பு கவச அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் சர்கோடா நகரில் இருந்து ஜம்மு நோக்கி வந்த எப்-16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதேபோல் 2 ஜே.எப். போர் விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன.


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form