டிரோன் தாக்குதல் எதிரொலி: ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 புதுடெல்லி:

பஹல்காம் தாக்குலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனால் நிலைகுலைந்து காணப்படும் பாகிஸ்தான், காஷ்மீரில் தற்கொலைப்படை டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் எஸ்-400 வான் பாதுகாப்பு கவசம் மற்றும் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்தின.

இந்நிலையில், முன் எச்சரிக்கை காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு 3 நாள் மூடப்படும் என அம்மாநில பள்ளிக் கல்வித்துறை மந்திரி அறிவித்துள்ளார்.

இதேபோல், ஜம்மு காஷ்மீரில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form