பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு பிறகு காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.
இந்நிலையில், காசா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் 3 நிபந்தனைகள் விதித்துள்ளது. அதாவது பிணைய கைதிகளை விடுதலை செய்து ஹமாஸ் அமைப்பு நாடு கடத்தப்பட வேண்டும் என்றும் காசாவில் ஆயுதங்கள் இருக்க கூடாது என்று இஸ்ரேல் நிபந்தனைகள் விதித்துள்ளது.
மேலும், உலக நாடுகளின் அழுத்தத்தால் உணவு பஞ்சம் அதிகரித்துள்ள காசாவுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது.