இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி இருக்கிறது. இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை.
வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ. மேற்கே 89 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் மியான்மர் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.