சென்னையில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்த நிலையில், சென்னை பூந்தமல்லியில் உள்ள சந்தோஷ் திரையரங்கின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து சேதமடைந்துள்ளது.
இதனால், சினிமா பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தநிலையில் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர், ரசிகர்கள் வெளியேற்றப்பட்டு சந்தோஷ் திரையரங்கிற்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈவிபி பிலிம் சிட்டி அருகே ஈவிபி திரையரங்கம் அண்மையில் சந்தேஷ் திரையரங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.