ஜனாதிபதியின் வியட்நாம் பயணம் தொடர்பான அறிவித்தல்!

 ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் வியட்நாமுக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் தொடர்பில் இலங்க‍ை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

வியட்நாம் ஜனாதிபதி லுவாங் குவோங்கின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எதிர்வரும் மே 04 முதல் மே 06 வரை வியட்நாம் சோசலிச குடியரசிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அனுரகுமார, வியட்நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்துவார்.

மேலும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட மூத்த பிரமுகர்களையும் சந்திப்பார்.

ஹோ சி மின் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின விழாவில் ஜனாதிபதி பிரதம விருந்தினராகவும் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்துவார்.

இந்த அரசு பயணத்தின் போது இரு தரப்பினரும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்களை முடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வணிக சமூகத்துடனான சந்திப்புகளும் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளின் 55 ஆண்டுகளைக் குறிக்கும் நிலையில், வியட்நாம் சோசலிசக் குடியரசிற்கான பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை மேலும் பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதியுடன் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form