மே தினத்தை முன்னிட்டு, அமமுக சார்பில் இன்று ராணிப்பேட்டையில் மே தின கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர்," புலி பதுங்குவது பாய்வதற்குதான்" என்றார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்," புலி பதுங்குவது பாய்வதற்குதான். ஆகையால் என்னை யாரும் குறைத்து எடைபோட வேண்டாம்.
ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டுவர மோடியுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும்" என்றார்.