முல்லைத்தீவு செல்வபுரத்தைச் சேர்ந்த முடியழகன் வேணி என்பவர் தனது தாயாரான சலோமியாம்பிள்ளை மேரி பிலோமினா என்பவரை கடந்த மாதம் 10 ம் திகதியிலிருந்து காணவில்லை எனவும் அவரை கண்டுபிடிக்க உதவுமாறும் ஊடகங்களிடமும் பொதுமக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று கற்கோவளத்திலுள்ள தனது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே முடியழகன் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதன்போது தனது தாய் வாய் பேச முடியாதவர் எனவும், அவர் தனது உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார் எனவும், ஆனால் அவர் அங்கும் செல்லவில்லை என்றும், அவர் தொடர்பான தகவல் ஏதும் இருந்தால் தமது தொலைபேசி இலங்கங்களான 0775570692 தொடர்புகொண்டு அறிவித்துதவுமாறும் கோரியுள்ளார்.