மதுரையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ராமதாசுக்கு இவ்வளவு வருத்தம் இருக்கிறது என்பது அவர் பேசுகையில்தான் தெரிகிறது.
* இருவரும் அமர்ந்து பேசி தீர்க்கும் சூழல் இல்லாததால் பொதுவெளியில் பேசுகின்றனர்.
* ராமதாஸ் மனதில் இருந்ததை கொட்டி விட்டார். இது ஆறும் காயம்.
* பயிற்சி எனும் பெயரில் முதலாளிகள் பல ஆயிரம் கோடி சம்பாதிப்பதற்குதான் நீட் வழியமைத்துள்ளது.
* நீட் குறித்து விஜய் பேசிய கருத்துக்கு நானும் உடன்படுகிறேன். மருத்துவம் மட்டுமே கல்வி அல்ல.
* நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் மட்டுமே போராடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.