தெலுங்கானாவில் நில அதிர்வு- பீதியடைந்த மக்கள்

 தெலுங்கானா மாநிலத்தில் இன்று மாலை திடீரென நில அதிர்வு ஏற்பட்டது.

இது, ரிக்டர் அளவில் 3.8ஆக பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நில அதிர்வு, கரீம் நகர் மற்றும் நிர்மல் ஆகிய மாவட்டங்களில் உணரப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ராமகுண்டம் பகுதியை மையமாக கொண்டு பூகம்பம் ஏற்படும் என கடந்த மாதம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அங்கு சில பகுதிகளில் வீடுகள் குலுங்கியதால் பீதியடைந்த மக்கள் உடனடியாக வீடுகளைவிட்டு வெளியேறினர்.


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form