ரஷியாவிடம் இருந்து Igla-S ஏவுகணைகளை இறக்குமதி செய்த இந்தியா.. என்ன பயன்?

 பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா சமீபத்தில் ரஷ்யாவிலிருந்து இக்லா-எஸ் ஏவுகணைகளை இறக்குமதி செய்துள்ளது.

அவசரக்காலங்களுக்கான ஆயுத இருப்புக்காக ராணுவம் இந்த குறுகிய தூர தாக்குதல் ஏவுகணைகளை இறக்குமதி செய்தது.

சில வாரங்களுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்ட இந்த ஏவுகணைகள் எல்லைக்கு கொண்டுசெல்லப்படுவதாகக் கூறப்படுகிறது..

ராணுவம் மொத்தம் ரூ. 260 கோடி மதிப்புள்ள ஏவுகணைகளை இறக்குமதி செய்துள்ளது. இவை மேற்கு எல்லை பகுதியில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ஏவுகணைகள் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இக்லா-எஸ் என்பது இந்தியாவிடம் ஏற்கனவே உள்ள இக்லா ஏவுகணைகளின் மிகவும் மேம்பட்ட பதிப்பாகும்.

 


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form