வார்சா:
ஐரோப்பிய நாடான போலந்தில் அதிபர் ஆண்ட்ரெஜ் டுடாவின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளது. எனவே புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பாராளுமன்ற தேர்தல் அங்கு நடைபெற்று வருகிறது.
முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 18-ம் தேதி நடந்து முடிந்தது. இதில் தாராளவாத ஐரோப்பிய ஒன்றிய சார்பு வேட்பாளரான ரபால் டிர்சாஸ்கோவ்ஸ்கியும் (53), பழமைவாத கட்சி சார்பில் கரோல் நவ்ரோக்கி (42) ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த கட்டத்துக்கு முன்னேறினர்.
இதனையடுத்து, 2-வது கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்த தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.