கிளிநொச்சியில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு!

 கிளிநொச்சி – பூநகரி பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட தம்பிராய் குளத்தை அண்டிய பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் இனம் தெரியாதவர்களால் சரமாரியான வாள் வெட்டுக்கு   இலக்கான நிலையில் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று(31) மாலை 6.30மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 27 வயதுடைய கந்தசாமி பிரணவன் எனும் பூநகரி செம்பங்குன்று பகுதியைச் சேர்ந்த இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பூநகரி  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form