கடந்த சில நாட்களாக தொடர்ந்த சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் சுமார் 60 ஆயிரம் மின் தடை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அவற்றில் இதுவரை ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான மின்வெட்டுகள் சீர் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, நேற்று முதலாம் திகதி வரையான நிலவரப்படி, 33 ஆயிரத்து 208 மின் தடைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
மத்திய மற்றும் மேற்கு மாகாணங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான மின் தடைகள் பதிவாகியுள்ளன.
நாடு முழுவதும் ஏதேனும் மின் தடை ஏற்பட்டால், அல்லது மின்சாரம் இன்னும் சீரமைக்கப்படவில்லை என்றால், அல்லது மின் கம்பிகள் அறுந்து விழுவது போன்ற ஏதேனும் சம்பவங்கள் ஏற்பட்டால், இலங்கை மின்சார சபையின் 1987 என்ற துரித எண்ணுக்கு அழைப்பினை மேற்கொண்டு முறையிடுமாறும் இலங்கை மின்சார சபை நுகர்வோரிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
அது தவிர, இலங்கை மின்சார சபையின் “CEB Care” மொபைல் செயலி மூலமாகவும் வாடிக்கையாளர்கள் இது தொடர்பில் முறைப்பாடு மேற்கொள்ளலாம்.