உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிறார் பி.ஆர். கவாய்.. ஜனாதிபதி ஒப்புதல்

 உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் வருகின்ற மே 13 ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.

இந்நிலையில் அடுத்த தலைமை நீதிபதியின் பெயரைப் பரிந்துரைக்க சஞ்சீவ் கன்னாவின் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

அதன்படி உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாயை (B.R. காவாய்) நியமிக்க சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்தார்.

இந்நிலையில் இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக நீதிபதி பி.ஆர். கவாய் நியமனத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சமூக ஊடக தளமான X இல் பகிர்ந்துள்ளார்.

தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வரும் நீதிபதி கவாய், மே 14, 2025 முதல் தனது புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்வார்.

வரும் நவம்பர் மாதம் ஓய்வுபெறும் வரை 6 மாத காலம் அவர் இந்த பதவியில் தொடர்வார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த கவாய், பணமதிப்பிழப்பு உறுதி செய்த தீர்ப்பு, தேர்தல் பத்திரம் செல்லாது என்ற தீர்ப்பு உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகள் வழங்கப்பட அமர்வில் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form